Saturday, September 19, 2009

நோன்பு காலம்




4:18    கீ கீ கீ அலரம் கூவல்
“...பா... எழுந்திரு! நோன்பு வைக்க நேரமாகுது..!’’
கணக்கின்றிப்போன அம்மாவின் அழைப்பு கூவல்
அலுப்புடன் எழுந்து அர்த்தம் தேடும்
நோன்பு கால கருங்காலை பொழுது

சூரியன் இன்னும் எழவில்லை
சூரிய கதிர்களாய் வாழ்வின் நற்பண்புகள் மீது
வெளிச்சமூட்டும் இந்த நோன்பு காலம்

வெறும் கடமைக்காக
நோன்பு வைக்க விரும்பது எந்த பக்குவப்பட்ட மனமும்
படைத்த இறைவனின்
படைப்பின் பலன்களை பெறுவதற்கும்
இறைவனோடு இன்னும் நெருங்க
இறைவன் அமைத்த பாதைத்தான்
இந்த நோன்பு காலம்

பொற்காலம்  குடியிருக்கும் குடும்பத்தில்
குடும்பமாய் அமர்ந்து
நோன்பு வைக்க உனவு உண்பது ஒர் குதுக்கலம்
உறவுகளின் பிணைப்புகளை இன்னும் பலப்படுத்தும்
இந்த நோன்பு காலம்

வளர்பிறையாய் ஈமானை வளர்க்கும்
இந்த நோன்பு காலம்
இறைவனை மண்டியிட்டு தொழும் பொழுது
என் பார்ம் இறங்குவதாகவும்
இறைவனிடம் கையேந்தி இறைஞ்சுதல் போது
இறைவன் மேன் மேலும் என்னை அருளச்செய்கிறான்
என் இன்னும் உண்மையாக உணர்கிறேன்

அன்னல் நபி (ஸல்) மொழிந்ததுப்போல்
நோன்பு மனித மாண்பு காக்கும் கேடயம்
வேளையிடத்தில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளிருந்தாலும்
அமைதியால் வேலையில் செயல்படுகிறேன்
ஆத்திரம் வந்தாலும் அடக்கிகொள்கிறேன்
இந்நற்குணங்களை நோன்பு வைத்தவர்களிடமும்
பிரகாசிக்க நானும் பார்க்கிறேன்

ஆசையும் இச்சையும்
நீயும் நானும் எளிதில் கேட்குப்போக உதவும்
நோன்பின் அர்த்தமறிந்தால்
நீயும் நானும் ஆசை இச்சை தவிர்த்து
உலக ஞானம் வளர்ப்போம்

தண்னீர் பல்லில் படாமல்
பசி வந்து வயிற்றைக் கிள்ளினாலும்
இறை நம்பிக்கை கற்றுக்கொடுக்கும்
தாங்கிகொள்ளும் பண்பு

எழை எளியோன்
பசி பட்டினி
அவற்றைப் பற்றி ஆழமாய் யோசிக்கும் அறிவு கூர்மை
ஈகை செய்யும் குணங்களை நோன்பு வளர்த்துவிடும்

பாகுபட்டால் உலகம் பிரிந்திருக்கு
பாவப்பட்டவன் என்ன செய்வான்?
சமதுவத்தை எப்படி பரப்புவது?
இவைகளுக்கு விடையளிக்கவே
இஸ்லாம் விரிந்து வருகிறது உலகெங்கும்

ஒருவனே இறைவன், அவனை மட்டும் வணங்குவோம்
ஒருவனே இறை தூதுவன், நபி முஹம்மது (ஸல்) வழிப்படி நடப்போம்
ஒருமையை பின்பற்றி மனித ஒற்றுமை வளர்கிறது இஸ்லாம்
வருட வருடமாய் வரும் ஒரு மாத நோன்பு காலம்
பல மடங்கு மனித ஒற்றுமையை புதுப்பிக்கிறது
சமுதாய நல்லிணக்கமாய்

பற்பல நன்மைகளை போதிக்கும் இந்த நோன்பு காலம்
மறுமையில் இறைவன் பாவப்பட்ட நம்மை மன்னிக்கவே
ஆயத்தப்படுத்தும் இந்த நோன்பு காலம்
இறையச்சத்தோடு இறைவனை தொழுவோம் எத்திருநாளும்
இஸ்லாம் வழிப்படி வாழ்வோம் வாழ்நாளும்
சொர்க்க வாசல் நம் வழியே திறந்திருக்கும்

Thursday, April 9, 2009

கவலையில்லாமல் காலம் கடந்துப்போகுது. நானும் அப்பக்கம் நடந்துப்போகிறேன் சில கவலைகளுடன். கவலைகள் இல்லாத மனிதர் இங்கு யாருயில்லை! எந்த வலைகளில் சிக்கினாலும், அதை பிய்த்துக்கொண்டு வந்ததை மனித வரலாறு கதைகள் நமக்கு கூறியதல்லவா!

பிற்ப்பிலே எத்தனை 'வீரர்களை 'சாய்த்து வந்தவனே, நீ தலைச் சாயலாமா?
இரு கைகள் இறைவன் உனக்கு கொடுத்தான் , நல்ல யுத்தத்தில் நீ வெல்லவே!

Friday, February 6, 2009






via ffffound.com

Panivizhum malarvanam un paarvai oru varam
inivarum munivarum thadumaarum kanimaram

(panivizhum)

saelai moodum ilanjoalai maalai soodum malarmaalai
irubadhu nilavugal nagamengum olividum
hey hey ilamaiyin kanavugal vizhiyoaram thulirvidum
kaigal idaithanil neligaiyil idaiveli kuraigaiyil
eriyum vilakku siriththu kangal moodum
http://www.free-lyrics.org

(panivizhum)

kaaman koayil siraivaasam kaalai ezhundhaal ha haa parigaasam
thazhuvidum pozhudhilae idam maarum idhayamae
hey hey viyarviyin mazhailae payiraagum paruvamae
aadum idaigalil vazhigira nilavoli iruvizhi
mazhaiyil nanaindhu magizhum vaanambaadi

(panivizhum)

Monday, February 2, 2009



via ffffound.com


Sunday, February 1, 2009

என்ன தப்புயிருக்கு?!



கணக்கர் வேளைப்பார்க்கும்
கணக்கரே
தப்புக்கணக்கு போடும்போது

புறம்பேசக்கூடாதென சொல்லி
புறம் பேசிவதில்
என்ன தப்புயிருக்கு?!

Saturday, January 31, 2009

இரவின் நிழல்

இரவின் நிழல் இம்மாத கவிமாலையின் கவிதை தலைப்பு. அதைப்பற்றி எழுத அவ்வளவாக எனக்கு ஆர்வம் வரவில்லை. நான் நல்ல கவிதை எழுதி ரொம்ப மாதங்களாகிவிட்டன. அரைத்த மாவை திருப்பி அரைக்க மனசு விருப்பமில்லை. எழுதுனும் எழுதி குப்பையாக ஒரு கவிதை எழுதி என்னை திருப்பதிபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் கவிதை எழுதுவதை நிறுத்திக்கொண்டு, மனம் நிறைய வாசிக்க தொடங்கிவிட்டேன்.
இருந்தும் அவ்வப்போது கவிதை எழுத தோனும் அல்ல தானாக என் முன்னால் கவிதை வந்து விரிவும் அவையே இங்கு இதுவரை பதிவு செய்து வந்தேன். மூன்று கவிதைகளாகயிருந்தாலும் அதில் ஒரு திருப்தி எனக்கிருந்தது.

திருப்தியான கவிதைகளை எழுதமுடிவில்லையேன ஒரு ஏக்கமிருந்தாலும், இரவின் நிழல் அதற்கு கொஞ்சம் திணிப்போட்டது. அதன் ஆழமான படிமங்களை யதார்தமாக கொணரமுடியாமல் தவித்தேன். பொரிதும் யோசிக்கவும் முடியாமல் பெரும் சவலாகத்தான் அமைந்தது இரவின் நிழல் எனும் தலைப்பு.

இரவை நிழலாய் காட்சி தரும் தருணங்களை படம்பிடித்தேன். அக்காட்சிகளைக் கோர்வையாக எழுதமுடியாமல் துண்டு துண்டாய் எழுதி ஒட்டு போட்டதுப்போல் அமைந்தது எனது இரவின் நிழல்.

படித்து, இக்கவிதையை மேலும் சிறப்பாக எழுத ஆலோசனை நீங்கள் கூறலாமே!

வானம் சாயாமல்
புள்ளி புள்ளியாய்
பங்கு சந்தை சரிவதுப்போல்
சூரியன் மதன மாயத்தில் சரியும்

சரியாமல்
குவியும் ஆசை
விடுப்பட்ட வித்தையை விட்டுப்பிடிக்க
மான் வேடத்தில் புலியும்
புலி வேடத்தில் மானும்
இந்திர நட்சத்திரங்களாய்
மோதிக்கொள்ளும் நேரம்


இயந்திரமாய் உழைச்சு
இன்னும் கொஞ்சம் இயந்திரமாய்
வீட்டுக் கணினியில் தொலையும் இரவு

கூரை ஒட்டையில்
நிலா பார்க்க முடியாமல்
வரைப்பட புத்தகத்தில்
நிலா வரையும்
ஏழு வயது குமுதா

பதினெட்டை தாண்டி பத்தொன்பதை
எட்டிப்பார்க்கும் ஒரு நிலா
அதன் கைத்தொலைப்பேசியை
அடிக்கடி பார்ப்பதேன்?...

தேன் தேன் தேடி
பப்பிலும் மப்பிலும்
இரவு தீர்ந்து குடித்து
நிலவு தேடும் இளமை

அய்யோ...
வானத்திலிருந்து தடுக்கி
தண்ணீரில் விழுந்த நிலவைப்போல்
தள்ளாடும் அவரவர் தனிமை

எங்கேயோ நெருக்கடி வீடுகளில்
கையிருக்கும் வயிறுக்கும் போராட்டமாய்
பதம் பார்க்கும் வறுமை

நிழல்போல் ஒட்டாமல்
ஜோடியிழந்த முதுமை
இரவொடு ஒடிந்து போக விரும்பும்

கறுப்பான இரவு
வெளிச்சமாய் நிலவும் நட்சத்திரங்களும்
நிதர்சனமாய் ஒரு உண்மை
இரவின் முகப்போல்
நிழல்போல் ஒட்டாமல் போகும்
பலரின் வாழ்க்கை

Friday, January 30, 2009

சில‌ த‌க‌வ‌ல் # 1

காந்திக்கு "மகாத்மா" என்னும் பட்டம் அளித்தவர் தாகூர் என்பது பலருக்குத் தெரியாது. நோபெல் பரிசு பெற்ற தாகூருக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 இல் நைட்கூட் (Knighthood) கௌரவம் அளித்தது. ஆனால் 1919 இல் ஜாலியன் வாலா பாக் தளத்தில் ஆயுதமற்றுப் போராட்டம் நடத்திய 400 மேற்பட்ட இந்திய சீக்கியரைப் பிரிட்டிஷ் படையினர் சுட்டுக் கொன்ற பிறகு தாகூர் அவர்கள் அளித்த கௌரவப் பட்டத்தைத் துறந்தார்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80901291&format=html


The Inauguration of the 44th President of the United States from White House on Vimeo.

என்ன நினைத்திருப்பார்??


அவர் ஆறுபது வயதை தாண்டிய சீனக்கிழவர்
அவர் கைக்கோர்த்து சீனவிலிருந்து வந்திருக்கும் சீன மங்கை
கறுப்பு உடை, உடல் ஒட்டி, முட்டி தொரியும் வரை உடுத்தி
கூதுக்கலமாய் எதோ பேசிக்கொண்டு நடந்துப்போனாள்

போருந்துக்கு காத்திற்க்கும் வரிசையில் நான்
என் முன்னே ஒரு சீனக்கிழவி
நான் பார்த்ததை அவரும் பார்த்தார்
அதையே தொடர்ந்து மொறைத்துப்பார்த்தார்
என்னுள்ள ஒரு கேள்வி
இக்கிழவி அதைப் பார்த்து என்ன நினைத்திருப்பார்??
Thanks ffffound

Thursday, January 29, 2009

Special Dedication to Ruth

Being online has made many things possible and one fine example would be making friends with people who are other end of the world. Blogging which i believe is a perfect way to interact with people around the world. From their writings which clearly speak about them, their cultures, background and so on. Helps to understand and relate to them much easier. Recently via blog of note, happened to visit a blog - http://ruthie822.blogspot.com , which simply evokes charm and good feel by just looking or reading her blog entries. I'm hypnotized by her writings and why not check it for yourselves to be hypnotized as well. Her words and photos sync as prose and poetic =)

This what she has said about tamil
...


Blogger Ruth said...

Dear Noorul, you have touched me, thank you so very much.

I fell in love with the Tamil script at your blog, showed my husband saying "isn't this beautiful?" and I thought it was Tamil, but I wasn't sure and didn't want to say it. So artistic and stylish. You are fortunate to have a long and ancient history. I am learning little slivers about India from rauf and mystic, and I get overwhelmed because there is so much more. Every square inch of India is full of complexity. I'm proud to have you visit and say such kind things.

1:06 PM, January 27, 2009


My small token of appreciation for Ruth, I have written her name and her husband name in stylish tamil.

(Ruth, i have posted this image so you can download this image for your own use)





Monday, January 26, 2009

விமியோ

வேலையிட‌த்தில் யாரும் பாராம‌ல் ர‌கிசியமாய் பார்ப்பீர்
இய‌ந்திர‌மாய் உழைச்சு இன்னும் கொஞ்ச‌ம் பார்ப்பீர் உங்க‌ள் வீட்டுக்க‌ணினிக‌ளில்
என்ன‌ப்பார்த்தோம் என்று இங்கு கேள்வியில்லை
எதில் பார்த்தோம்?...

அதுப்போல் நானும் பார்தேன்
உல‌க‌ம் விய‌ந்து விரிந்து பார்த்தேன்
ப‌ய‌னும் புல‌னும் ப‌ல‌னும் நீய‌டைவ‌துப்போல்
அவ்வாறு நானும் ...விரிவாக‌யேன் சொல்ல?!
இவ்வாறு எழுத‌ இங்கு நான் வ‌ர‌வில்லை
இன்னொரு நேர‌ம் தொலைக்கும் இட‌த்தை நான் க‌ண்டெடுத்தேன்
அதை நீங்க‌ள் க‌ண்டுக்கொள்ள‌ இங்கு போக‌....

ர‌சித்த‌ க‌விதை # 2

நான் ஒரு வேங்கை !
நான் ஒரு வேங்கை !
காத்துக் கிடப்பேன் பதுங்கி
இலைகளுக் கடியில்
ஈரக் கனிமத்தில்
உப்பி விட்ட
உலோகக் கட்டிபோல் !
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30901225&format=html

ர‌சித்த‌ க‌விதை # 1


புத்தகம்
ரா.கணேஷ்.


ரயிலில் பிரிந்து
போனது இரண்டு
இரவல்
கொடுத்து
வராமல் போனது
ஏழெட்டு இருக்கும்
முன்னொரு காலத்தில்
வறுமை
அள்ளிக்கொண்டு
போனது இருபது
காதலிக்கு பா¢சாய்
போனது ஒன்று
மனைவி
சப்பாத்தியிடும் போது
பலியானது இரண்டு
புத்தகங்கள்
வாங்கிய
அனுபவத்தைவிட
இப்படியாய்
தொலைத்த அனுபவம்தான்
இன்று மனதில்
சுயிங்கமாய்
ஒட்டிக்கொண்டு....

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30901228&format=html

Saturday, January 24, 2009

வாழ்க்கை என்ப‌தும் இப்ப‌டியும் இருக்க‌னும்.....



CANARY ISLANDS HD from monso on Vimeo.

Monday, January 19, 2009

சும்மா ஒரு போஸ்டு #1


நாளையிலிருந்து தொடங்கும்!

நம்ம ஒபாமா நாளைக்குத்தான்

அமொரிக்கப் பதவி பிரமானம் எடுக்குறாரு!

காத்திருப்போம் நம்ம ஆளு எப்படி

கலக்கப்போராருண்டுடுடு!!!!

Saturday, January 17, 2009

எங்கேயோ கேட்ட கவிதை






" இன்று வரைக்கும் என் அம்மா கேட்கிறாள்
இதுவரைக்கும் ஏன் எனக்கு boyfriendடு இல்ல??!"


இது நம்ம கதை என வசந்தத்தில் வரும் இவ்வர நிகழ்ச்சி promoவில் அந்நிகிழ்ச்சியில் பங்கெற்ற இளம் பெண் பேசிய வார்த்தை எனக்கு நல்ல கவிதையாய் தோன்றியது.







நன்றி ffffound
பயிற்ச்சி பயிற்ச்சி சாத்தியம் உன் முயற்ச்சி !

நான் நினைத்தால் , நினைத்ததை செயல்படுத்தினால, நினைத்ததை நான் அடைவேன். பழைய புதிய எண்ணங்களை, புதிய வண்ணத்தில் பூசவே இந்த வலைப்பதிவு தளத்தை தொடங்கினேன். இத்தளம் என் தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு பட்டறையாய் அமையும் என்பது என் தின்னம். இத்தளத்தின் மூலம் மின்னிலகில் பரந்திருக்கும் உலக தமிழ்வாழ்களை என் தமிழ் எழுத்துக்கள் மூலம் இணைக்கவும் விளைக்கிறேன். பல அற்புத, அறிவு சார்ந்த, சுவைப்பட படைப்புகள் பல வடிவத்திலும் பல மொழிகளிலும் இணையத்தின் மூலம் பார்த்திர்ப்போம் படித்திர்ப்போம். என் வாழியில் நான் ரசித்த, பிரமித்த, மற்றும் என் உணர்வுகளை உற்சாகப்படித்திய உள்ளம் உழுக்கிய படைப்புகள் இத்தளத்தில் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அவை நான் கொணர்ந்த உணர்வுப்போல் நீங்களும் அடைவீர் என நம்புகிறேன்.

தற்செயலாக You Tube channelலில் கமல்ஹாசனின் ஏய்ட்ஸால் பதிக்கப்பட்டவர்களை எப்படி சமுதயம் ஒதுக்கி வைக்கிறது, அதை சமுதய தவிர்க்க வேண்டும் என இந்த விளம்பர விழிப்புணர்வு விடியோவைப் பார்த்தேன். அந்த விழிபுணர்வை மேலும் பரப்ப இங்கு இணைந்துள்ளேன். அந்த விடியோவை பார்த்து உங்கள் பங்கிற்கு நீங்களும் செயல்படுங்கள்.

இது சிறகுகளின் நேரம் #1

மலர்கள் அற்ப ஆயுள் உடையவை என்று நாம் நினைக்கிறேம்.
அதற்காகப் பரிதாப்படுகிறேம்.
ஆனால், ஒரு வகையில் மலர்கள் நமக்கு பொறாமை ஏற்படுத்தும் படைப்புகள்.
அவை சில மணி நேரம்தான் வாழ்கின்றன
என்றாலும் சிரித்துக்கொண்டே வாழ்கின்றன.

இந்த தாத்துவத்தை நான் ஒப்பவில்லை.
கவிக்கோ அப்துல் ரகுமானின் இது சிறகுகளின் நேரம்! நூலில் 'முகத்திரை விலக்கல்' என்ற தொகுப்பில் எழுதிருப்பார் அதை நான் அப்ப்டியே இங்கு ஈ அடிச்சான் காப்பிபோல் அப்பி விட்டேன்.

இது சிறகுகளின் நேரம் கவிக்கோ அப்துல் ரகுமானின் இன்னொரு சிறந்த படைப்பு நான் மட்டுமில்லை நீங்களும் படித்துப்பார்த்தால் மனம் மகிழ்ந்து சொல்வீர்கள். அவ்வளவு யதார்தம் அவ்வளவு தத்துவம் அவ்வளவு உற்சாகம் நான் ஒவ்வொரு கட்டுரையும் படிக்க உணர்ந்தேன் பரவசமைடைந்தேன்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை விரும்பி படைப்போன் ஆனால் அவரின் கவிதைகள் எளிதில் எனக்கு புரியாது. இது சிறகுகளின் நேரத்தில் உள்ள கட்டுரைகள் அப்படியல்ல, கவிக்கோ அப்துல் ரகுமானின் எழுத்து எளிதாகுவும் இருந்தது மோலும் அவர் எழுத்து நடைமோல் கூட மோகமும் கூடியது.

இது சிறகுகளின் நேரத்தில் நான் அடைந்த உணர்வுகளை இன்னொரு பதிவில் பதிவு செய்வேன் அது வரைக்கு நீங்கள் நலம் தானா? உங்கம் உடலும் உள்ளமும் நலம் தானா? ...

Monday, January 12, 2009

வரைப்படங்கள்





இதுப்போன்ற வரைப்படங்கள் மீது அலாதி மயக்கம்

கனவுகள் பூக்கின்ற செடிகள் 2009

ஆண்டு 2009 வந்துடுச்சு,
12 நாட்கள் தாம்தூம்னு ஒடிடுச்சு,
ஒரு நாள் கடந்து வரும் தைப்பொங்கல்,
மின்னுலகில் பரந்திருக்கும் தமிழர்களுக்கு
முன்கூட்டிய சொல்லுகிறேன் பொங்கல் வாழ்த்துக்கள்
நாளைக்கும் மறுநாளும் எனக்கு வேலை ஓய்வு,
இருந்தும் வீட்டில் பல வேலையிருக்கு,
கனவு சோலையில் ஓய்வுக்கு ஒதுங்கமுடியவில்லை
நித்தம் நிகழும் பொருளாதரம் தரமாகயிருப்பதில்லை;
"நாளையிலுருந்து இரவு வேலையில்லை,
அதனால் பகலுக்கு வேலை மாற்றம்."
அதன் மூலம் எனக்கும் பொருளாதரம் ஏமாற்றம்
என் வருங்காலத்தோடு பேசும்போது நிகழ்ந்தது
என்னையறியாமல் மனசில் ஒரு தடுமாற்றம்
மண்ணில் ஒளி மின்னுவதுபோல் மறுக்கணம்
என்னில் ஒரு உருமாற்றம்
கல்லோடு கல் உரசி தீப்பொறி
உள்ளத்தோடு உள்ளம் உரசும்போது
சின்ன சின்ன தீப்பொறிப்போல்
சின்ன சின்னத்தாய் மனம் பேசி
ஒரு வகை ஆறுதல், மன மாறுதல்,
புதிய ஒளியைக் கணவோடும்
" சத்யம், சத்யமென்ன??!
சத்யத்திற்க்கு சத்யம் ஒரு மோசடி!!!"
அதுப்போல நான் வேண்டாம்
உனக்கு நான் சத்யம்! இது சத்யம்!
உன்னிடம் சொல்லாமல்,
என்னிடம் நான் சொல்லிக்கொண்டேன்!"